Saturday, December 13, 2008

அலைகளின் ஓசை...


அலைகளின் ஓசை-1


கடற்கரையில் தனிமையில் இருந்தாலும், அவளுக்குள் தனிமை கிடைக்கவில்லை. அவளது மனத்துக்குள் நிம்மதியில்லை. எப்பொழுதும் கல கல என சிரிப்புக்கே தேவதையாக இருக்கும் அவளுள் இப்பொழுது சிரிப்பு அவளுக்கு எதிரியாக தெரிந்தது.


எங்கே சென்றது அவளது புன்னகை? அலைகளின் ஓசைகளில் எப்பொழுதும் நிம்மதியைக் காணும் அவள், அன்று அலைகளின் ஓசையைக் கண்டாலே காதை பொத்திக் கொண்டாள். அலைகளை சத்தம் போடாதே என கத்த வேண்டும் போல இருந்தது.


என்ன இருந்தாலும் அவள் அப்படி பேசியிருக்கக் கூடாது. நாங்கள் என்ன பிறந்ததில் இருந்து அப்படியா பழகியிருக்கிறோம். மனது அந்த அலைகளை விட வேகமாக அலசியாது.


கடவுளே என்னை நித்தம் நித்தம் கொல்வதை விட, ஒரேடியாக என்னை கொன்றுவிடு.


கதரி கதரி அழுதாள், அவளுக்காக ஆறுதலாக இருந்தது கடற்கரையிலிருந்த காலடிகள் மட்டுமே.


[தொடரும்]
அன்புடன்
பார்த்தசாரதி பரமேஸ்வரி

Saturday, November 29, 2008

வலி...

வலி...

உலகத்திலேயே ரொம்பவும் பெரிய வலி என்றால் மன வலினு தான் சொல்ல முடியும்.நம் உடல் உபாதையால் ஏற்படும் வலி அதற்கான மருந்துக்களை சாப்பிட்டுவிட்டால் குணமடைந்துவிடும் ஆனால் மனதால் ஏற்படும் வலி எப்பொழுது நமது மனோவலிமை பெருகிறதோ , அப்பொழுதுதான் அவ்வலி குணமடையும்.
ஆனால் எப்பொழுது அந்த வலியால் ஒருவர் மறக்கமுடியாமல் அவஸ்தை படுகிறாரோ, மன வலியால் அவரால் எப்பொழுதுமே குணமடைய முடியாது.வாழ்க்கையில் எல்லோரும் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறுவதை விட எந்த ஒரு எதிர்ப்பார்ப்புகளும் இல்லாத ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
என்னுடைய லோகிக் மிகவும் ஈஸி. ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அந்த சம்பவத்தில் என்னை புகுர்த்தி பார்ப்பேன். பிறகு உண்மையான சம்பவத்தின் முடிவை வேறுபடுத்தி பார்ப்பேன்.
எப்பொழுதும் நான் நினைப்பது போல முடிவு இருப்பதில்லை. அதனாலேயே என்னை நான் வம்புக்குள் மாட்டிக் கொள்வது. அனைவரும் சமம் இல்லை என்பது எனக்கு தெரிந்த ஒன்றே. ஆனால் ஏன் அவர்கள் அந்த முடிவை எடுத்தார்கள் என்பது எனக்கு லோகிக்காக படவில்லை என்றால் மண்டையே வெடித்துவிடும் போல இருக்கும்.
ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ள் மௌன‌ங்க‌ள் அமைதி த‌னிமை எல்லாம் மிக‌வும் கொடூர‌மாக‌ இருக்கும்ஆனால் நமது மௌனங்களை பிறர் தவறாக கூட எடுத்துக்கொள்ளலாம். நீ ஒரு அடங்கா பிடாரி..பிறரை மதிக்க தெரியாதவள் என.
அதே வேளையில், எவ்வளவு நாள்தான் மனதிலேயே அனைத்தும் வைத்திருக்க முடியும்?என்றாவது ஒரு நாள் சொல்லிவிட்டாள் நமக்கு கிடைக்கும் பட்டம் மனதில் தாங்காது...

Tuesday, November 25, 2008

மன்னித்துவிடு...


மன்னித்துவிடு...



மிகவும் வேதனையுடன் எழுதுகிறேன். மன்னித்துவிடு எனும் இந்த வார்த்தைகள் சொல்வது எவ்வளவு சுலபம். ஆனால் அந்த வார்த்தையால் மட்டும் நாம் பிறரது மனதை புண்படுத்தியது ஆர முடியுமா?


முடியாதுதான் . ஆனால் ம‌ன‌ முவ‌ர்ந்து ம‌ன்னித்துவிடு எனும் சொல்லும் பொழுது நாம் என்ன‌ செய்ய‌ முடியும்? அதே மாதிரி ம‌ன‌தை ஏற்க‌ன‌வே புண்ப‌டுத்திய‌துதானே ம‌ன‌திற்கு தெரிகிற‌து.


ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் நான் க‌ட‌வுளிட‌ம் வேண்டிக் கொள்வ‌து. "இறைவா என‌க்கு ஞாப‌க‌ ம‌ற‌தியைக் கொடு" . இம்மாதிரி ம‌ன‌ வேத‌னைக‌ளை தாங்கிக் கொள்ளும் ச‌க்தி என‌து சிந்த‌னைக‌ளுக்கு மிக‌வும் க‌டின‌மாக‌ கொண்டிருக்கிற‌து.


மூளை வ‌லித்து வெடித்துவிடுவ‌து போல‌ வேத‌னைக‌ளை சில‌ ச‌ம‌ய‌ங்க‌ள் வ‌ருவ‌துண்டு.சார‌தி அடிக்க‌டி கூறுவ‌து நான் பார்த்து ப‌ழ‌கிய‌ பெண் நீ அல்ல‌. அவ‌ள் தைரிய‌ சாலி மிக‌வும் அமைதியான‌வ‌ள். நீயோ கோப‌க்காரி கோழையாகிவிட்டாய் என‌.


சார‌திக்கு தெரியுமா இந்த மாற்றங்களை நானே விரும்பியதல்ல என. கோழையாகிவிட்டால் கோப‌மும் அதிக‌ம் வ‌ரும் என‌. ஏன்? த‌ன‌து கோழைத‌ன‌த்தை மறைக்க கோபம் தான் உதவும்.

Sunday, November 23, 2008

ஒரு இதயம்...


ஒரு இதயம்...



வெள்ளிக்கிழமை மதிய உணவை பெரும்பாலும் நாங்கள் வெளியில் சாப்பிடுவது வழக்கம். அன்றாடம் அந்த நான்கு சுவத்துக்குள் சாப்பிடுவது சற்று கடுப்பாக இருந்தது. அதற்காக நானும் என் தோழியும் எடுத்துக் கொண்ட முடிவு.அதுவும் அம்மாவும் எனக்காக காலை ஐந்துக்கே உணவை தயாரிக்க தேவையில்லை என்பதும் ஒரு காரணமாகும்.


சென்ற வெள்ளியன்று எனது தோழியின் நண்பரும் எங்களுடன் சேர்ந்துக் கொண்டார். அன்று நாங்கள் ஒரு விரைவு உண்வகத்திற்கு சென்றோம்.எப்பொழுதும் போல அரட்டைதான். அப்பொழுது ஒரு வெள்ளைக்கார பெண்மணி ஒருவர் மேஜையின் மேல் இரண்டு கீ செய்யினை வைத்து ஒரு அட்டையும் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.


என்ன‌டா அது என‌ நான் எடுத்து பார்த்தேன். அந்த‌ அட்டையிலோ, அவ‌ர் வாய் பேச‌முடியாத‌ காது கேட்க‌ முடியாத‌வ‌ர் அத‌னால் இம்மாதிரியான‌ கீ செய்யினை [ கை விணை பொருட்க‌ள்] விற்ப‌தாக‌வும் அந்த‌ அட்டையில் எழுதியிருந்த‌து. ஒரு கீ செய்யின் ஆறு ரிங்கிட்டும் இர‌ண்டு ப‌த்து ரிங்கிட் என‌ எழுதியிருந்த‌து.


அந்த‌ விரைவு உண‌வ‌க‌மும் என‌க்கும் ச‌ற்று சென்டி மெண்ட் அதிக‌ம். அதே உண்வ‌க‌த்தில் எங்க‌ள் செல்ல‌ குட்டியுட‌ன் சாப்பிடும் பொழுது இதே மாதிரி இருவ‌ரிட‌ம் கைவிணை பொருட்க‌ளை வாங்கியிருக்கிறோம்.அந்த‌ குட்டியின் ஞாப‌க‌ம் அதிக‌மாகிவிட்ட‌து.


ஒரு இத‌ய‌ம் போட்ட‌ ஒரு கீ செய்யினை வாங்கிவிட்டேன். என‌து குட்டியின் ஞாப‌க‌மாக‌....


எங்க‌ள் இத‌ய‌த்தில் என்றும் இருக்கும் எங்க‌ள் குட்டி பெண். அவ‌ளுக்காக‌ இந்த‌ ப‌திவு.
அன்புடன்
சாரம்பதி

Wednesday, November 12, 2008

நாங்கள் இல்லாத பிறந்தநாள்...

நாங்கள் இல்லாத பிறந்தநாள்...




சென்ற ஆண்டு குமரியாக, குடும்பத்தினருடன் கொண்டாடிய பிறந்தநாள், இவ்வருடம் திருமதியாக நீங்கள் இருவரும் அங்கிருக்கையில், இங்கு பெற்றோர்களும் நானும் உங்களை மனமுவற வாழ்த்துகின்றோம் அக்கா.

வாழ்க்கை ஒரு சக்கரம் என்றார்களே, அன்று என்னக்குப் புரியவில்லை. இன்று நாங்கள் மூவரும் இங்கு உனக்கு கண்னியின் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டோம். முன்பு நாம் அனைவரும் கணினியின் முன் இருந்தோம்.இப்பொழுது நாம் கணினியில் எதிர் திசையிலிருந்து வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டோம்.


எங்கிருந்தால் என்ன? அனைவரும் உள்ளத்தால் ஒன்றாக தானே இருக்கின்றோம். இறைவனின் கிருபையால் அனைவரும் ஒரே இடத்திலிருந்து கொண்டாட வேண்டுகிறேன்...

Monday, September 15, 2008

அந்த மூன்று வார்த்தைகள்...


"ஆஹா வந்திருச்சு.. ஆசையில் ஓடி வந்தேன்..." , நான் என்னோட காதல் கதையைப்பற்றி எழுத வரலைங்க.. எல்லாம் என்னோட தோழருடயதுதான்.. கஷ்டப்பட்டு ஒரு பொண்ணை ஒரு மூனு மாசமா டேட்டீங் போயிட்டு , இன்னைக்குதான் தைரியம அந்த மூனு வார்த்தையை சொல்ல போறாருங்க..:)இன்னைக்கு சிறப்பு பதிவு இன்றைக்கு..


சரி சரி டேட்டீங்னு சொன்ன உடனே, இங்கிலீஸ் படத்தல வர மாதிரி எல்லாம் நினைக்காதிங்க..இரண்டு பேரும் நாம் கொஞ்ச நாள் மனசு விட்டு பேசி பழகலாம்னு பேசி முடிவெடுத்திருக்காங்க. என்னோட தோழருக்கு அந்த ஃபிலீங் கொஞ்சம் நாள் முன்பே வந்திடுச்சு. ஆனால் அந்த பொண்ணுகிட்ட சொல்லுறதுக்கு ரொம்ப ஊசார இருக்கிறாரு. ஏற்கனவே ஒரு மலைக்கு கூட்டிகிட்டு போய் அந்த வார்த்தையைச் சொல்லலாம்னு தைரியத்தை வர வச்சிருக்காரு ஆனால் முடியல.


இன்னைக்கு அந்த பொண்ணோட பிறந்தநாள். என்னமா ஆட்டம் நம் தோழருக்கு. பெரிய தெடி பேர்[Teddy Bear] , பன்னிரெண்டு சிவப்பு ரோஜாப்பூ, அதுல ஒன்னு தூய வெள்ளை, அப்படினு செம ஜோரா கொண்டாடி இருக்கிறாரு.



இந்த நேரம் நம் தோழர், அந்த பொண்ணுகிட்ட அந்த மூன்று வார்த்தைகளை சொல்லியிருப்பாருனு நினைக்கிறேன்.


"ஐ லவ் யூ"னு சொன்னாலும் சரி " நான் உன்னை காதலிக்கிறேன்"னு சொன்னாலும் சரி.சீக்கிரம் எங்கள் அனைவருக்கும் ஒரு விருந்து இருக்கும்னு நாங்க நினைக்கிறோம்.


அன்புட‌ன் சார‌ம்ப‌தி

Sunday, September 7, 2008


சண்டை கோழி...



சரி சரி நான் சண்டை கோழி படத்தோட ரிவிய் எழுத வரல. நேற்று வீட்டுல சண்டைங்க..ஒன்னும் பெருசா இல்லை. இந்த எழுதுற பொண்ணு இருக்காலே அவள் தான் வாயை வெச்சுகிட்டு சும்மா இல்லாம தன்னோட அக்காகிட்ட வம்பு இழுத்துட்டா. எல்லாம் கொழுப்புங்க வேற ஒன்னுமில்லை. அதான் உடம்பின் இடை ஏறிக்கிட்டே போகுதுல அப்புறம் எப்படி கொழுப்பு ஏறாம இருக்கும்.


சரி சரி. அம்மா நேற்று ரொம்ப ஃபிலோட பேசிட்டாங்க.. ஆதான் அம்மாகிட்ட சொன்னேன் என்ன அம்மா இப்படி சொல்லிட்டீங்க.. நாங்க இன்னைக்கு அடிச்சுக்குவோம் அப்புறம் நாளைக்கு கூடிக்குவோம்னு.. சரி எதுக்கு அம்மா இப்படி ஃபில் பண்ணாங்கனா.. நான் இப்போ தூது போகனுமேனு.. நான் சொல்லிட்டேன் .அ து எல்லாம் ஒன்னும் வேண்டாம் நாங்க பார்த்துகுறோம்னு.


எங்க, நான் பார்த்துகிறது? இன்னைக்கு காடில அக்கா பேசவே இல்லை. செஞ்ச காரியத்துக்கு கட்டிபிடிச்சு முத்தமா கொடுப்பாங்க.. நானும் பேசலாம்னு வாயைதிறக்கலாம்னு நினைச்ச.. மறுபடியும் சண்டை வந்துச்சின என்ன பண்ணுறது.. அதனால அப்படியே உட்கார்ந்துட்டேன். எல்லாம் ஈகோ தான் வேர என்னானு சொல்லுறது. அதை முதல போட்டு உடைக்கனும்.



சரி திடிர்னு நான் செஞ்ச இரு காரியம் ஞாபகம் வந்திடுச்சு. நாங்க சின்னப்பிள்ளையா இருக்கும் போது ஒரு சண்டைநில நான் கையில இருந்து "screw driver" ரை எடுத்து அக்கா முகத்துக்கு நேரா வீசிட்டேன் . என் நல்ல நேரம் அது அக்கா முகத்துல படல. அக்காவும் சொன்னாங்க.. அப்போ என் கண்ணுல பட்டுருந்த என்ன செஞ்சு இருப்பனு. என்ன முதல்ல அம்மா அப்பாகிட்ட இருந்து நல்ல உதை விழுந்திருக்கும் அதுக்கு பிறகு காலாமெல்லாம் நான் குற்ற உணர்ச்சியோட இருந்திருப்பேன்.



ஆமாம் இது என்ன கதையா இருக்கு, எல்லாம் நான் செஞ்ச தப்பா மட்டும் சொல்லிகிட்டு இருக்கேன். அப்போ அக்கா தப்பே செய்யாத மகானா? நெவர் அதை நான் ஒத்துக்க மாட்டேன் :)நான் இரண்டு தப்பு செஞ்சாலும் அவங்க அட்லீஸ் எனக்கு தெரிஞ்சு ஒரு தப்பாவது செய்வாங்க்க. எனக்கு தெரியாம எவ்வளவோ இருந்திருக்கலாம் :) யாருக்கு தெரியும் [ இன்னைக்கு ஒன்னா தானே காடில வீட்டுக்கு போறோம் நான் காலி..]. நாளை நான் பதிவு எதுவும் போடலனா என் கதி என்னானு நீங்களே யூகிச்சிக்கிங்க.. [ சாமியோவ் என்னை காப்பாத்துப்பா]


நான் சின்ன பள்ளிக்கூடத்தில படிக்கும் போது ஸ்கூல கேலண்டர் கொடுத்தாங்க. நான் அதை பார்த்திக்கிடும் இருக்கும் போது அக்காவும் பார்ர்கனும்னு சொன்னாங்க.. விடுவேனா.. ஒரே கயிர் இழுக்கும் போட்டித்தான். கடைசியில என்னோட இடது கையில் ஒரு கிழிச்சல். இரத்தம் கொட்டோ கொட்டுச்சு. என்னோட வெள்ளக்கலர் சதை தெரிஞ்சுச்சு.


நான் சின்ன பிள்ளைனு அக்கா விட்டு கொடுத்து போயிருக்கனும்ல..
சரி இதுக்கு மேல எழுதினா எங்க நேத்துல சண்டை தீராது . நான் வேலையைப் பார்க்கனும்..வரட்டா...

Saturday, July 5, 2008

Atigam - Kuraivu

Kaadhali.. ethir paarpu kuraivu, kidaipathu atigam
Manaivi.. ethir paarpu atigam, kidaipathu kuraivu

Kaadhali.. nambargal atigam, uravugal kuraivu
Manaivi.. nambargal kuraivu, uravugal atigam

Kaadhali.. sandai kuraivu, mannippu atigam
Manaivi.. sandai atigam, mannipu kuraivu

Kaadhali.. bayam atigam, veruppu kuraivu
Manaivi.. bayam kuraivu, veruppu atigam

Kaadhali.. kadamaigal kuraivu, santosam atigam
Manaivi.. kadamaigal atigam, santosam kuraivu

Kaadhali.. pechu atigam, seivathu kuraivu
Manaivi.. pechu kuraivu, seivathu atigam

Kaadhali.. selavu kuraivu, varavu atigam
Manaivu.. selavu atigam, varavu kuraivu


With Love
Parthasarathy Parameswary

Wednesday, July 2, 2008

Yes, I do

Yes, I do

Can you imagine how someone will feel after waited for six years to hear Yes, I do from loved one?

We can't measure the happiness on their face. They waited such a long time for these three words. What we need are patience, sincerity and of course a lot of love.
I am not a person who has patience for some matters. This matter included in.
My other half is not defiantly like me. He really waited almost long sweet six years to hear these words from me.

Let me explain few things about girls. When a guy confesses his love to a girl, he only think about his life with the girl. He has a surety that his parents will agree for his selection on his life. Is that going to be same for girl? Especially when the girl is so much close with her parents and family?, its going to be so much difficult for her to get approval from her parents. What will be happen if the guy that she love is refused by her parents? She will be in dilemma whether she going to be with her loving parents or loving partner?

This is too much complicated right? So that why it is too much hard to get confess from a girl. When she said Yes I do, that means a lot for her. She meant to take you as her life partner, her other half. She have trust on you as much as she has on her parents. She can defense for you. She is willing to share her love on you.

So it is so much struggle for a girl to say these three words,
Yes, I do.

With Love
ParthaSarathy Parameswary

Monday, June 23, 2008

எழுத்து....

எழுத்து....

என்னையே நான் வெறுத்த நேரம் அப்பொழுது.. என் மேல் அன்பு செலுத்தியவர்களின் மேல் நான் வெறுப்பாக இருந்திருந்தேன். எத்தனை காலம் என்னால் இப்படி இருக்க முடியும்? என்னது எண்ணத்தையும் சிந்தனையும் சற்று மாற்ற நான் நமது கூகிளில் உலா வந்துக் கொண்டிருந்தேன். தமிழ் குழுமம் என நான் அச்சடித்து தேடிய பொழுது எனக்கு கிடைத்த இரண்டு பொக்கிஷங்கள் தான் முத்தமிழும் நம்பிக்கையும்.

முத்தமிழ், தமிழ் உள்ள எழுத்துக்கள் தான் என்னை ஈர்த்தன.. நம்பிக்கை, அது தான் எனக்கு அப்பொழுது தேவைப்பட்டது. அதுவும், என் மேல் நான் எரிச்சல் கொண்டிருந்த வேளையில் நம்பிக்கை மிகவும் முக்கியமே எனக்கு. எப்படி எழுதுவது? அதுவும் தமிழில்? தமிழ் எழுத்து என்னக்கு புதியது அல்ல. ஆனால் அவை எழுது வருடம் ஆறு ஆகிவிட்டன. என்ன செய்வது?

அதுமட்டுமில்லாமல் எப்படி தச்சு அடிப்பது? ம்ம் ஒரு மென்பொருளாளர் என்றாலும் இவை எனக்கு புதியதே.எனது கவனத்தை எழுதுவதில் செழுத்தினேன். ஒரு வாரம் ஒரு படைப்பு இதுதான் என்னுடைய முன்னால் குறிக்கோள். இப்பொழுது ஒரு மாதம் ஒரு படைப்பு என்பதே சிரமம் ஆகிவிட்டது. ஆனால் ஒன்று, அன்று எனக்கு தேவை பட்ட ஒரு மாறுதலை கொடுத்தது , இவ்விரு குழுமங்களே. அன்று தமிழ் அச்சடித்த நான், இன்றும் தொடர்கிறேன், இனி என்றும் தொடர்வேன் என் மூச்சிருக்கும்வறை..



அன்புடன்,
பார்த்தசாரதி பரமேஸ்வரி

Monday, June 16, 2008

Love is blind?

Love is blind?

Love is blind, the famous quote that used in many cinemas, especially in Tamil Movies. So let’s see how far it’s true. In our real life can some one fall in love without any attraction?


I don’t agree on that. How that possible for some one fall in love with the person without any attraction. I am not only talking about physical attraction. Tell me, who will love someone that they feel not attracted in their viewpoint? But whether the others feel the same or not its different questions J . Logically if there is no physical attraction , there cannot be any love start.


Character, let’s see how far a person can attracted with a person character. If you feel someone is so much disgusting and you can’t tolerate their behaviors can you love them? Unless you started to like on what their doing and saying. How exactly we will start to like someone character if he don’t in the beginning?


It’s called as UnderstandingJ. So if we don’t have any understanding how exactly we can speak and see each other? Can you imagine meeting up some one that you think behaving weird? Can u stand their character? Something to think about na?

Okie, Lets see Physical attraction, Character and understanding, these are listed so far. So which is the most and the lease important?


Seriously this is not going to be 100% correct because No one 100% correct unless everyone in this world and in this universe feel the same. J Think; is this going to be happened? Nope rite?


Okie let us come back to our title. Physical attraction, character and understanding so which on is the most important.


Let’s say that there is a girl that pretty like an angel and have character like devil. There is guy who has angel character. Do you think that if the guy fall for her only her prettiness and not her character? If lets say yes he did. What will happen? When the girl getting old, or when her prettiness is reduced, do you think their love will be there?


Let’s say there is a gal and her character is like a gem but not so good looking. Do you think her personality can over write physical attraction? It is possible rite? But I am sure that they guy must have the feeling that she is cute my heart and look too?


Understanding, if a girl has a character like gem and looks like miss world and the guy is unable to understand her, what will happen? Defiantly their relationship is not going to work out rite?


So let’s see which one is important now? J I feel each and every point has its own important and I am unable to list it out the preference.

Don’t think that I am forgetting the title. It’s whether love is blind? I think it is blind when we take the status in the community, the religion, the age and etc. Bill gates daughter can fall in love some who very poor. Some one in Christianity can fall in love with Hindu. 20 years boy can fall in love with 40 years old lady J .

So is love is blind?

With Love,
ParthaSarathy Parameswary





Tuesday, June 10, 2008

The Magic of Love

The Magic of Love
The magic of first love is our ignorance that it can ever end. Love works miracles every day: such as weakening the strong, and strengthening the weak, making fools of the wise, and wise men of fools, and, in a word, turning everything topsy-turvy. Love must be learned, and learned again, there is no end to it. Love doesn't make the world go around. Love is what makes the ride worthwhile. Love is a game that two can play and both win. Love is a discovery of ourselves in others, and the delight of recognition.
Love is spontaneous and craves expression through joy, through beauty, through truth, even through tears. Love lives the moment, it's neither lost in yesteryear nor does it crave for tomorrow. Love is Now! Love is love's reward. Love is not blind but visionary, it sees into the very heart of its object. Love is the tenderness felt whenever someone special is near, it's the way, a day is brightened by a few tender words, it's the happiness found in the warmth of an embrace, it's a look that lends sparkles to each and every day, it's a thought that drifts someone to a wonderful world of dreams fulfilled, it's the reason to celebrate life's precious gifts, Love has no remedy, but love.

சாரம்பதி

சாரம்பதி

உங்கள் அனைவரையும் இந்த வலைபதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களுடன் எங்களின் எண்ணங்களையும், எங்கள் வாழ்க்கையையும் சற்று பகிர்ந்துக் கொள்ளவே இந்த வலை. அனைத்தையும் படம் பிடித்து காட்ட இவ்வலை ஒரு கண்ணாடி அல்ல. ஆனால் இதுநாள் வரை நாங்கள் கடந்து வந்த காலம், இனியும் நாங்கள் உங்களுடன் கடக்க போகும் காலம், இவற்றை இப்பொழுதில் இருந்தே நாங்கள் பதிவு செய்தால் எங்களின் வயதான காலத்தில் ஒரு நினைவூட்டலாக இருக்கும் அல்லவா?


சற்று யோசித்துப் பாருங்கள், எங்கள் வயதான காலத்தில் நான் தட்டு தடுமாறி என்னது கணினியை "ஓன், " செய்து பிறகு எனது மூக்குக்கண்டாடியை போட்டுக் கொண்டு, இணயத்தில் இந்த வலையில் உலா வரும் பொழுது, கண்டிப்பாக நாங்கள் நடந்து வந்த பாதைகளை சற்றும் குறையாமல் என் கண் எதிரே நிழல் படம் போல ஓடும் அல்லவா? வாழ்க்கை முழுவதும் எங்களது சந்தோஷம் தொடர வேண்டும் என்பதே எங்களின் சிந்தனை.


ஏன் சாரம்பதி ?


சுலபமான பதில் சாம்தி.. சாதி ம் இருவரின் பெயரை சேர்த்து வந்த ஒரு வார்த்தை. தமிழ் வார்த்தையா? இல்லை ஆங்கில வார்த்தையா எனத் தெரியவில்லை. ஆனால் இருவரும் எழுதும் இந்த வலையில் இரு பெயரும் இருப்பதே எங்களது ஆசை..


பெற்றோர்களின் ஆசியுடன் எங்களது வாழ்க்கை பயணத்தை நாங்கள் தொடங்கப் போகின்றோன். இந்த பயணத்தில் நீங்களும் ஒரு பயணிகளாக எங்களுடன் இருந்தால் அம்மகிழ்ச்சிக்கு எல்லை கிடையாது...

என்றும் அன்புடன்,

பார்த்தசாரதி பரமேஸ்வரி