Tuesday, September 15, 2009

ரோஜாவே

ரோஜாவே





பெண்களை உள்ளங்கவர்ந்த பூக்களில் ரோஜாவிற்கு தான் எப்பொழுது முதலிடம். அத‌ன‌ ம‌ன‌ம், அத‌ன் இத‌ழின் மென்மை என‌ அனைத்துமே பெண்க‌ளின் உள்ள‌த்தை கொள்ளை கொண்ட‌வை. சிவ‌ப்பு, வெள்ளை , ஆர‌ஞ்சு, நீல‌ம் என‌ அத‌ன‌ வ‌ர்ண‌ங்க‌ளை நாம் எண்ணிக் கொண்டே போக‌லாம்.
இந்த‌ ப‌திவு ரோஜா பூவை ப‌ற்றிய‌து அல்ல‌.


ந‌ம‌து தோழ‌ரின் ப‌திவின் ஒரு தொட‌ர்ச்சி. என்ன‌ தொட‌ர்ச்சி என‌ கூறிய‌துட‌ன் எது என்ன‌ யோசிக்கிறீர்க‌ளா? ஒரு வ‌ருட‌த்திற்கு முன் எழுதிய‌ எழுத்தின் தொட‌ர்ச்சி.


ஒரு வ‌ருட‌ம் , அவ‌ர்க‌ளிருவரும் ஒன்றாக‌ த‌ங்க‌ளின் உற்ற‌ தோழ‌ர் தோழியாக‌ இருந்து. அவ‌ர்க‌ளின் உற‌வு மென்மேலும் வ‌ள‌ர‌ எங்க‌ளின் வாழ்த்துக‌ள். [ அப்புர‌ம் நாங்க‌ ம‌ட்டும் க‌ல்யாண‌ம் செய்து க‌ஷ்ட‌ ப‌ட‌னும்னு ந‌ம் தோழ‌ர் அடிக்க‌டி சொல்லுவாரு , அதான் சீக்கிர‌ம் அவ‌ரும் திரும‌ண‌ ப‌ந்த‌தில் இணைய‌ வாழ்த்துக‌ள்].


ம‌ணி காலை ப‌தினொன்று, முக்கிய‌மான‌ வேலையில் இருக்கும் பொழுது , ஸ்கைப் மின்னிய‌து,


தோழர்: "உங்க‌ளுக்கு எங்கே ரோஜா கொத்து வாங்க‌லாம் என‌ தெரியுமா?

நான் [ம‌ன‌தில்]: என‌க்கு எப்ப‌டி தெரியும்? நான் யாருக்கு வாங்கியிருக்கேன்?நான்: ஆன்லைனில் வேண்டுமா ? நான் தேடி த‌ர‌வா?

தோழ‌ர்: என‌க்கு நூறு ரோஜா வேண்டும். அதான் கேற்குறேன்.

நான்: நூறா? யாருக்கு? உற்ற‌ தோழிக்கா? பிற‌ந்த‌ நாளா?

தோழ‌ர்: ஹீ ஹீ ஆமாம் [ ஸ்கைப்ல‌ அச‌டு வ‌ழிந்தார்]

நான்: அப்பொ நீங்க‌ நேர‌டியா தான் வாங்க‌னும் . நூறு ச‌ரியான‌ விலையாகுமே?

தோழ‌ர்: ல‌ன்ச் நேர‌ம் நாம் மீட் ப‌ன்ன‌லாமா? என‌க்கு கொஞ்ச‌ம் உத‌வி வேண்டுமே.

நான்: க‌ண்டிப்பா வ‌ரேன். 12 ம‌ணிக்கு ச‌ந்திக்க‌லாம்.


அது என்ன நூறு என நான் சில தகவல்களை தேடினேன். அப்பொழுதுதான் ஒவ்வொரு வர்ண ரோஜாக்களும் ஒரு பொருளை கொண்டிருக்கிறது என்பதும், ரோஜாவின் எண்களும் ஒரு நோக்கத்தை குறிக்கிறது என்றும்.
1 ரோஜா‍‍ கண்டவுடன் காதல்
3 ரோஜா நான் உன்னை காதலிக்கிறேன்
15 ரோஜா என்னை நீ மன்னித்துவிடு
36 ரோஜா நாம் ஒன்றாக இருந்த நேரத்தை நான் மறக்க மாட்டேன்
99 ரோஜா என் உயிர் இருக்கும் வரை உன்னை நான் காதலிப்பேன்
100 ரோஜா கடைசிவரைக்க்கும் நாம் ஒன்றாக இருப்போம்.


நானும் சீக்கிர‌ம் அலுவ‌ல‌க‌த்தை விட்டு கிள‌ம்பி தோழ‌ரை ச‌ந்திக்க‌ சென்றேன். அவ‌ரும் அங்கு வ‌ருவ‌த‌ற்கு நேர‌ம் ச‌ரியாக‌ இருந்த‌து.
அவ‌ர் ஏற்க‌ன‌வே வாங்கியா அதே க‌டைக்குச் சென்றோம். நூறு ரோஜா எவ்வ‌ள‌வு என‌ கேட்டோம். அத‌ன் விலையைக் கேட்டு வாயைத்தான் பிள‌ந்தோம். ஹா ஹா . எண்ண‌ம் ம‌ணி அடித்த‌து [ஐடியா ம‌ணி].


தோழரே நூறு ரோஜா இப்பொழுதே வேண்டுமா? இப்பொழுது சிறிய‌ அள‌வு கொடுங்க‌ளேன். உங்க‌ள் திரும‌ண‌ அன்று நீங்க‌ள் நூறு கொடுக்க‌லாமே? அவ‌ரும் அதை அமோதித்து 36 ரோஜா , சிவ‌ப்பு ரோஜா வாங்கினார்.

நேர‌மின்மையால் நான் அந்த‌ பூங்கொத்து கிடைக்கும் வ‌ரை காத்திருக்க‌வில்லை :( . ந‌ம‌து தோழ‌ரி இன்று உற்ற‌ தோழிக்கு அத‌னை கொடுத்து பிறந்த‌நாளை கொண்டாடிக் கொண்டிருப்பார். அவ‌ர்க‌ளிருவ‌ருக்கும் வாழ்த்துக‌ள்.

அன்புட‌ன்


சார‌ம்ப‌தி

Wednesday, September 9, 2009

ஜான் மாரியம்மன் கோவில்...


ஜான் மாரியம்மன் கோவில்...

இந்த பெயரை கேட்டவுடன் எனக்கும் குழப்பங்கள் தான்.. புது வகையான கோவில் பெயராக இருக்கிறதே என என் குழப்பத்திற்கு முற்று புள்ளி வைத்தவர் என் அம்மா தான்.
கிள்ளான் பட்டிணத்தில் உள்ள கோவில் தான் இந்த ஜான் மாரியம்மன் கோவில். ஆனால் அந்த கோவிலை நாங்கள் செட்டியார் கோவில் என கூறுவோம். அதற்காண காரணம், இந்த கோவில் அரசாங்கத்தினுடையதில்லை, செட்டியார் என்பவர்களால் பராமரித்து வரும் கோவில்.
ஆனால் இந்த கோவிலின் அருகிலேயே சில மாதா கோவில்கள் இருக்கின்றன, அதானல் சிலர் இந்த கோவிலை ஜான் மாரியம்மன் கோவில் என அழைக்கிறார்கள்.
ஒற்றுமை மக்களிடன் இருக்கும் பொழுது பெயரி என்ன இருக்கிறது?

இப்படிக்கு
சாரம்பதி

தொடரும்-க்கு ஒரு தடை

தொடரும்-க்கு ஒரு தடை

தொடரும்..தொடரும் என சில பதிவுகளில் நான் எழுதியிருந்தாலும் அவைகளை நான் தொடராமல் இருப்பது மன கசப்பை தருகிறது . இனிமேல் தொடரும் என வார்த்தையை உபயோகிப்பதை நானே எனக்கு தடை செய்ய போகிறேன்..

இப்படிக்கு
சாரம்பதி

Monday, April 13, 2009

சின்ன சின்ன வாண்டுகள்..

சின்ன சின்ன வாண்டுகள்..

எங்கள் குட்டியின் பதிமூன்றாவது பிறந்தநாள். அவள் பிறந்து பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன என என்னால் நம்ப முடியவில்லை.


அவளை பிறந்த பொழுது தூக்கியது நினைவில் இன்றும் இருக்கிறது. பிங் நிறத்தில் இருந்தாள். கைக் குழந்தைகளை தூக்குவது என்றால் எனக்கு ஒரு பயம். என் கைகளின் இடுக்குகள் வழியாக அந்த சிறு உருவம் கீழே விழுந்துவிடுமோ என்ற பயம். அம்மா அடிக்கடி நினைவுறுத்தும் அறிவுரை, பிள்ளைகளின் தலையை நன்றாக பிடிக்க வேண்டும் இல்லையேல் உற‌ம் விழுந்துவிடும் என. உறம் என்றால் சுளுக்கு என நினைக்கின்றேன்.

பெரியவர்களாக இருக்கும் நமக்கே சுளுக்கு பிடித்தால் அதன் வலியை தாங்க முடியாது. பிஞ்சுகள் , அதுவும் எங்கே உறம் இருக்கு என நமக்கு சொல்லத் தெரியாத அந்த பிஞ்சுகளுக்கு உறம் விழுந்தால் எப்படி இருக்கும் ? இப்ப‌டியாக‌ கைக்குழ‌ந்தையான‌ இருந்த‌ அந்த‌ குட்டியைதான் முத‌லில் தூக்கினேன். தூக்கிய‌வுடனே "வீர்" ‍என்று அழ‌ ஆர‌ம்பித்துவிட்டாள். என்ன‌ செய்வ‌து என‌ தெரியாம‌ல் அப்ப‌டியே கீழே அவ‌ளை வைத்துவிட்டேன். முக‌ம் , உட‌ம்பெல்லாம் சிவ‌ப்பு வர‌ண‌த்தில் மாறிவிட்ட‌ன‌. என‌க்கோ ச‌ரியான‌ ப‌ய‌ம். என்னால் ஏதாவ‌து ஆகிவிட்ட‌தா என‌.


இப்ப‌டிதான் எங்க‌ள‌து தொட‌ர்பு ஆர‌ம்பித்த‌து. என் அத்தைவீட்டில் வ‌ள‌ர்ந்தால் அந்த‌ செல்ல‌ம். ஆனால் அவ‌ர்க‌ள் வேலைக்குச் சொல்லும் பொழுது அவ‌ளை பார்த்துக் கொண்ட‌து நாங்க‌ள் தான். பிள்ளைக‌ளை அடித்து வ‌ள‌ர்ப்ப‌தை விட‌ அன்பால் வ‌ள‌ர்ப்ப‌து தான் முறை என‌ என் பெற்றோர்க‌ளின் ந‌ம்பிக்கை. எங்க‌ளை என் பெற்றோர்க‌ள் திட்டினார்க‌ள் என்றால் அதை விர‌ல் விட்டு எண்ணும் அள‌விற்குதான் அடிக்காத‌ பெற்றோர்க‌ள் , அன்பாக‌ பேசுப‌வ‌ர்க‌ள், இம்மாதிரி இருந்தால் எந்த‌ குழ‌ந்தைதான் பாச‌த்தால் எங்க‌ளிட‌ம் இணையாது? இந்த‌ குட்டியும் அப்ப‌டிதான். அப்பாவுட‌ன் சேர்ந்து ஒரு ம‌ணிநேர‌ம் சாமி கும்பிடுவாள். காய‌த்திரி ம‌ந்திர‌த்தின் மேல் இவ‌ளுக்கு அலாதி ந‌ம்பிக்கை.

ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ
யோன: ப்ரசோதயாத்

ஒரு முறை அவ‌ள‌து காலில் அடிப்ப‌ட்ட‌து என‌ அவ‌ள் அழுது ஆர்ப்பாட்ட‌ம் செய்த‌ பொழுது. இந்த‌ ம‌ந்திர‌த்தை சொல்லும்மா சீக்கிர‌ம் குண‌மாகும் என‌ சொன்னார் என் அம்மா. அவ‌ளும் அதை செய்தால். அவ‌ள் ம‌ன‌முடைந்த‌ பொழுது அவ‌ளுக்கு உறுதுணையாக‌ இருந்த‌து இந்த‌ ம‌ந்திரம் தான்.
எங்க‌ளுள் ஒருவ‌ராய் வ‌ள‌ர்ந்த‌வ‌ளுக்கு பிற‌ந்த‌நாள்.

[தொட‌ரும்]
அன்புட‌ன்
சார‌ம்ப‌தி

Saturday, April 11, 2009

உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்கேன் ஐலசா

உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்கேன் ஐலசா

மண்ணை நம்பி ஏலேலோ மரம் இருக்கு ஐலசா

மரத்தை நம்பி ஏலேலோ கிளை இருக்கு ஐலசா

கிளையை நம்பி ஏலேலோ இலை இருக்கு ஐலசா

இலையை நம்பி ஏலேலோ காய் இருக்கு ஐலசா

காய்யை நம்பி ஏலேலோ கனி இருக்கு ஐலசா கனியை நம்பி ஏலேலோ நீ இருக்காய் ஐலசா

உன்னை நம்பி ஏலேலோ நான் இருக்கேன் ஐலசா..

பி.கு:‍ மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் பொழுது சில சிட்டுகள் பாடிய தமிழ் பாடல் இது.அவர்களின் பாட்டு என் காதில் இனிமையாய் ஒலிக்கிறது







Wednesday, April 8, 2009

டும் டும் டும் -1

டும் டும் டும் -1

முன்பே எழுதியிருக்க வேண்டிய பதிவு, நேரமின்மையால் எழுத முடியவில்லை. வீட்டைக் க‌ட்டிப்பார் க‌ல்யாணாம் செய்த்துப்பார் என்று சொல்வார்க‌ள். இந்த‌ இரு செய‌ல்க‌ளையும் செய்து முடித்தால் வாழ்க்கையில் பாதி பொறுப்புக‌ளை செய்துமுடித்துவிட்ட‌தாக‌ என்ன‌லாம்.

முன்பு எல்லாம், மாப்பிளை / பெண் பார்ப்ப‌திலிருந்து, திருமண‌நாள், திருமண‌ ம‌ண்ட‌ப‌ம் ம‌ற்றும் சாப்பாடு என‌ அனைத்தையும் க‌ன்காணிப்ப‌து பெற்றோர்க‌ளின் பொறுப்பாக‌ இருந்த‌து. பிள்ளைக‌ளின் திரும‌ண‌த்தை செய்து முடித்துவிட்டால் வாழ்க்கையில் த‌ன‌து க‌ட‌மைக‌ள் முடிந்துவிட்ட‌தாக‌ என்பார்க‌ள்.
த‌ற்ச‌ம‌ய‌ம், த‌ன‌து வாழ்க்கை துணையிலிருந்து, திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌ம், சாப்பாடு , அல‌ங்கார‌ம் என‌ அனைத்தையும் திரும‌ண‌ புரிப‌வ‌ர்க‌ளே செய்வ‌தால் , திரும‌ண‌த்தை செய்து முடிக்க‌ பெற்றோர்க‌ளின் பொறுப்புக‌ளை அவ‌ர்க‌ள் ந‌ன்கு புரிந்துக்கொள்கிறார்க‌ள்.


திருமணம்










எனது தோழிகளின் வட்டாரத்தில் இரண்டு பேர் மட்டுமே இதுவரை திருமணம் செய்துள்ளனர். எனது நெருங்கிய தோழி வட்டாரத்தில் யாருமே இதுவரை திருமணம் செய்ததில்லை. பெண்களில் திருமண வயது 21 என சொல்வார்கள். ஆனால் எங்களது வயதோ முப்பதை தொட இன்னும் இரண்டு மூன்று வருடங்களே உள்ளன ஆனால் திருமணத்தை நோக்கி செயல்படுபவர்கள் குறைவே. நேர‌மின்மை, இன்னும் வாழ்க்கையின் துணையை தேர்ந்தெடுக்க‌வில்லை, ப‌ல‌ சுமைக‌ள் என‌ த‌ங்க‌ளுக்கென ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளுட‌ன் அவ‌ர்க‌ளின் திரும‌ண‌ வாழ்க்கை இன்னும் ஆர‌ம்ப‌மாக‌ வில்லை.

வாழ்க்கை துணைம‌ட்டுமே தேர்ந்தெடுத்தால் போதுமா? இருவ‌ரும் எப்பொழுது ம‌ன‌த‌ள‌வின் திரும‌ண ப‌ந்த‌தில் இணைய‌ முடியும் என‌ பார்க்க‌ வேண்டாமா? ஆனால் என்னை பொருத்த‌ம‌ட்டில் எப்பொழுதுமே நாம் திரும‌ண ப‌ந்த‌தில் இணைவ‌த‌ற்கு முழு ச‌ம்ம‌த‌ம் த‌ருவ‌து க‌டின‌ம். வாழ்க்கை எனும் ஓட‌ம் எப்ப‌டி போகிற‌தோ அப்ப‌டிதான் நாமும் அதை ஓட்ட‌ முடியும் அல்ல‌வா?


Friday, February 27, 2009

அஞ்சலை...

அஞ்சலை...



மனது ரொம்ப வருத்திக் கொண்டு பார்த்த பாடல் இது. அழகான வரிகள், இறந்து போன காதலிக்காக, ஆருயிர் காதலன் படிக்கும் பாடல். அதுவும் குடி போதையில் பிறகு ஒரு போதை பித்தனாய்.

காதலுக்கு கண் மட்டுமல்ல மூளையும் இல்லைனு நினைக்கிறேன். அது எப்படி ஊயிருக்கு ஊயிராய் காதலித்த பெண் இறப்புக்கு பிறக்கு இப்படி திரிய முடிகிறது? காதலி இறந்துவிட்டால் இனி எப்படி வேண்டுமென்னாலும் இருக்கலாம் என்று முடிவெடுத்து விடுவதா?

ஆருயிராய் காதலித்தவளின் எண்ணம் எப்படி இருக்கும் என்று கூடவா சிந்திக்க முடியவில்லை? என‌து பாதியின‌ரிட‌ம் கேட்டால், காத‌ல் மூளையில் இருந்துவ‌ருவ‌தில்லை ம‌ன‌சில் இருந்துவ‌ருவ‌து. மிக‌ முக்கிய‌மாக‌ ஆண்க‌ளுக்கு என்று.

ச‌ற்று யோசித்தேன். ஆம், பெண்க‌ளா இப்ப‌டி திருந்து அலைந்துக் கொண்டிருக்கிறார்க‌ள். முக்கால் வாசி அனைவரும் இறந்த காதலின் நினைவாக திருமண செய்யாமல் இருக்கிறார்கள். ஏனுங்க இவ்வங்கள மட்டும் இப்படி செய்யுராங்க?