அப்பா.....
நீங்கள் இல்லாமல் எங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறி கொண்டிருக்கிறது. எங்களுக்கு ஆறுதல் தருவதாக சொல்லி பல மன சுமைகளை ஏற்றுகிறார்கள். நீங்கள் எங்கள் இடத்தில் இருந்திருந்தால் இவையாவும் நிகழ்ந்திருக்காது.
எங்களுக்கு ஆலமரமாய் இருந்தீர்களே அப்பா...
நிழல் கிடைக்காமல் நாங்கள் தவிக்கிறோமே அப்பா..
பலர் எங்கள் நன்மைக்காக பல சுமைகளை ஏற்றுகிறார்களே அப்பா...
என் வாழ்வில் கறுப்பு ஜீலையாக இந்த வருடம் எங்களை மூழ்கடிததே அப்பா...
இனிமேல் எப்பொழுது உங்களை நாங்கள் காண முடியும்..
கண்ணீருடன்
பரமேஸ்வரி நேமிலி...
Saturday, September 18, 2010
Monday, August 23, 2010
மறுபடியும்....
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுத்துகளை நாடி வந்திருக்கிறேன். ஒரு நான்கு வருடங்களுக்கு முன் மன அமைதிக்காக எழுததுவங்கியவள் மறுபடியும் அதே மன அமைதியை நாடி எழுதுகிறேன்.
கண்ணீர் இல்லாமல் அனை(த்து)வருக்கும் மிகவும் அமைதியாக பதில் அளிப்பவளுக்கு உணர்வுகள் இல்லையா?
கடவுளே.. ஏன் இந்த சோதனை?
கடவுளின் ஆசீகள் எப்பொழுதும் என்னிடம் இருக்கிறது என பெருமை பட்டேனே.. ஆனால் இந்த மகிழ்வு மிக குறுகிய காலத்திலேயே சோகத்தை கொடுக்கிறதே....
கால இயந்திரம் என்னுடன் இருந்தால்.....
ஸ்ரீ ராம ஜெயம்
Wednesday, March 17, 2010
Vicky in my life...
The day I brought Vicky into my house, she was having bulgy stomach and trying to escape from the box that I gave to him. Vicky is my first dog. I don’t have any experience with dog before, other then feeding some stray dog in my previous home.
Before I took Vicky to my home, I asked my father whether he can take care of medical expenses of her or not.
We were still studying at that time and my father only person who work in my family. He was a lorry driver and 3of his children still studying, it is a huge responsibility to say yes at that time.
He agreed with my condition, but why?
When we meet Vicky at my aunty house, she was tight up with raffia string around her neck. She was in tears and unhappy at all. When I asked my aunty about the puppy, she told me that it’s for her daughter who stays in another village.
I am not a person who likes to ask for other people’s belongings but my heart can’t stop thinking about the puppy at all.
I played with him and spoke to my father whether we can bring him to our house or not..
He agreed
It’s has been almost ten years since Vicky with us. I can share the experience that I never regret bringing him into my life.
Before I took Vicky to my home, I asked my father whether he can take care of medical expenses of her or not.
We were still studying at that time and my father only person who work in my family. He was a lorry driver and 3of his children still studying, it is a huge responsibility to say yes at that time.
He agreed with my condition, but why?
When we meet Vicky at my aunty house, she was tight up with raffia string around her neck. She was in tears and unhappy at all. When I asked my aunty about the puppy, she told me that it’s for her daughter who stays in another village.
I am not a person who likes to ask for other people’s belongings but my heart can’t stop thinking about the puppy at all.
I played with him and spoke to my father whether we can bring him to our house or not..
He agreed
It’s has been almost ten years since Vicky with us. I can share the experience that I never regret bringing him into my life.
Tuesday, September 15, 2009
ரோஜாவே
ரோஜாவே
பெண்களை உள்ளங்கவர்ந்த பூக்களில் ரோஜாவிற்கு தான் எப்பொழுது முதலிடம். அதன மனம், அதன் இதழின் மென்மை என அனைத்துமே பெண்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவை. சிவப்பு, வெள்ளை , ஆரஞ்சு, நீலம் என அதன வர்ணங்களை நாம் எண்ணிக் கொண்டே போகலாம்.
இந்த பதிவு ரோஜா பூவை பற்றியது அல்ல.
நமது தோழரின் பதிவின் ஒரு தொடர்ச்சி. என்ன தொடர்ச்சி என கூறியதுடன் எது என்ன யோசிக்கிறீர்களா? ஒரு வருடத்திற்கு முன் எழுதிய எழுத்தின் தொடர்ச்சி.
ஒரு வருடம் , அவர்களிருவரும் ஒன்றாக தங்களின் உற்ற தோழர் தோழியாக இருந்து. அவர்களின் உறவு மென்மேலும் வளர எங்களின் வாழ்த்துகள். [ அப்புரம் நாங்க மட்டும் கல்யாணம் செய்து கஷ்ட படனும்னு நம் தோழர் அடிக்கடி சொல்லுவாரு , அதான் சீக்கிரம் அவரும் திருமண பந்ததில் இணைய வாழ்த்துகள்].
மணி காலை பதினொன்று, முக்கியமான வேலையில் இருக்கும் பொழுது , ஸ்கைப் மின்னியது,
தோழர்: "உங்களுக்கு எங்கே ரோஜா கொத்து வாங்கலாம் என தெரியுமா?
நான் [மனதில்]: எனக்கு எப்படி தெரியும்? நான் யாருக்கு வாங்கியிருக்கேன்?நான்: ஆன்லைனில் வேண்டுமா ? நான் தேடி தரவா?
தோழர்: எனக்கு நூறு ரோஜா வேண்டும். அதான் கேற்குறேன்.
நான்: நூறா? யாருக்கு? உற்ற தோழிக்கா? பிறந்த நாளா?
தோழர்: ஹீ ஹீ ஆமாம் [ ஸ்கைப்ல அசடு வழிந்தார்]
நான்: அப்பொ நீங்க நேரடியா தான் வாங்கனும் . நூறு சரியான விலையாகுமே?
தோழர்: லன்ச் நேரம் நாம் மீட் பன்னலாமா? எனக்கு கொஞ்சம் உதவி வேண்டுமே.
நான்: கண்டிப்பா வரேன். 12 மணிக்கு சந்திக்கலாம்.
அது என்ன நூறு என நான் சில தகவல்களை தேடினேன். அப்பொழுதுதான் ஒவ்வொரு வர்ண ரோஜாக்களும் ஒரு பொருளை கொண்டிருக்கிறது என்பதும், ரோஜாவின் எண்களும் ஒரு நோக்கத்தை குறிக்கிறது என்றும்.
1 ரோஜா கண்டவுடன் காதல்
3 ரோஜா நான் உன்னை காதலிக்கிறேன்
15 ரோஜா என்னை நீ மன்னித்துவிடு
36 ரோஜா நாம் ஒன்றாக இருந்த நேரத்தை நான் மறக்க மாட்டேன்
99 ரோஜா என் உயிர் இருக்கும் வரை உன்னை நான் காதலிப்பேன்
100 ரோஜா கடைசிவரைக்க்கும் நாம் ஒன்றாக இருப்போம்.
1 ரோஜா கண்டவுடன் காதல்
3 ரோஜா நான் உன்னை காதலிக்கிறேன்
15 ரோஜா என்னை நீ மன்னித்துவிடு
36 ரோஜா நாம் ஒன்றாக இருந்த நேரத்தை நான் மறக்க மாட்டேன்
99 ரோஜா என் உயிர் இருக்கும் வரை உன்னை நான் காதலிப்பேன்
100 ரோஜா கடைசிவரைக்க்கும் நாம் ஒன்றாக இருப்போம்.
நானும் சீக்கிரம் அலுவலகத்தை விட்டு கிளம்பி தோழரை சந்திக்க சென்றேன். அவரும் அங்கு வருவதற்கு நேரம் சரியாக இருந்தது.
அவர் ஏற்கனவே வாங்கியா அதே கடைக்குச் சென்றோம். நூறு ரோஜா எவ்வளவு என கேட்டோம். அதன் விலையைக் கேட்டு வாயைத்தான் பிளந்தோம். ஹா ஹா . எண்ணம் மணி அடித்தது [ஐடியா மணி].
அவர் ஏற்கனவே வாங்கியா அதே கடைக்குச் சென்றோம். நூறு ரோஜா எவ்வளவு என கேட்டோம். அதன் விலையைக் கேட்டு வாயைத்தான் பிளந்தோம். ஹா ஹா . எண்ணம் மணி அடித்தது [ஐடியா மணி].
தோழரே நூறு ரோஜா இப்பொழுதே வேண்டுமா? இப்பொழுது சிறிய அளவு கொடுங்களேன். உங்கள் திருமண அன்று நீங்கள் நூறு கொடுக்கலாமே? அவரும் அதை அமோதித்து 36 ரோஜா , சிவப்பு ரோஜா வாங்கினார்.
நேரமின்மையால் நான் அந்த பூங்கொத்து கிடைக்கும் வரை காத்திருக்கவில்லை :( . நமது தோழரி இன்று உற்ற தோழிக்கு அதனை கொடுத்து பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருப்பார். அவர்களிருவருக்கும் வாழ்த்துகள்.
நேரமின்மையால் நான் அந்த பூங்கொத்து கிடைக்கும் வரை காத்திருக்கவில்லை :( . நமது தோழரி இன்று உற்ற தோழிக்கு அதனை கொடுத்து பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருப்பார். அவர்களிருவருக்கும் வாழ்த்துகள்.
அன்புடன்
சாரம்பதி
Wednesday, September 9, 2009
ஜான் மாரியம்மன் கோவில்...
ஜான் மாரியம்மன் கோவில்...
இந்த பெயரை கேட்டவுடன் எனக்கும் குழப்பங்கள் தான்.. புது வகையான கோவில் பெயராக இருக்கிறதே என என் குழப்பத்திற்கு முற்று புள்ளி வைத்தவர் என் அம்மா தான்.
கிள்ளான் பட்டிணத்தில் உள்ள கோவில் தான் இந்த ஜான் மாரியம்மன் கோவில். ஆனால் அந்த கோவிலை நாங்கள் செட்டியார் கோவில் என கூறுவோம். அதற்காண காரணம், இந்த கோவில் அரசாங்கத்தினுடையதில்லை, செட்டியார் என்பவர்களால் பராமரித்து வரும் கோவில்.
ஆனால் இந்த கோவிலின் அருகிலேயே சில மாதா கோவில்கள் இருக்கின்றன, அதானல் சிலர் இந்த கோவிலை ஜான் மாரியம்மன் கோவில் என அழைக்கிறார்கள்.
ஒற்றுமை மக்களிடன் இருக்கும் பொழுது பெயரி என்ன இருக்கிறது?
இப்படிக்கு
சாரம்பதி
தொடரும்-க்கு ஒரு தடை
தொடரும்-க்கு ஒரு தடை
தொடரும்..தொடரும் என சில பதிவுகளில் நான் எழுதியிருந்தாலும் அவைகளை நான் தொடராமல் இருப்பது மன கசப்பை தருகிறது . இனிமேல் தொடரும் என வார்த்தையை உபயோகிப்பதை நானே எனக்கு தடை செய்ய போகிறேன்..
இப்படிக்கு
சாரம்பதி
தொடரும்..தொடரும் என சில பதிவுகளில் நான் எழுதியிருந்தாலும் அவைகளை நான் தொடராமல் இருப்பது மன கசப்பை தருகிறது . இனிமேல் தொடரும் என வார்த்தையை உபயோகிப்பதை நானே எனக்கு தடை செய்ய போகிறேன்..
இப்படிக்கு
சாரம்பதி
Monday, April 13, 2009
சின்ன சின்ன வாண்டுகள்..
சின்ன சின்ன வாண்டுகள்..
எங்கள் குட்டியின் பதிமூன்றாவது பிறந்தநாள். அவள் பிறந்து பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன என என்னால் நம்ப முடியவில்லை.
அவளை பிறந்த பொழுது தூக்கியது நினைவில் இன்றும் இருக்கிறது. பிங் நிறத்தில் இருந்தாள். கைக் குழந்தைகளை தூக்குவது என்றால் எனக்கு ஒரு பயம். என் கைகளின் இடுக்குகள் வழியாக அந்த சிறு உருவம் கீழே விழுந்துவிடுமோ என்ற பயம். அம்மா அடிக்கடி நினைவுறுத்தும் அறிவுரை, பிள்ளைகளின் தலையை நன்றாக பிடிக்க வேண்டும் இல்லையேல் உறம் விழுந்துவிடும் என. உறம் என்றால் சுளுக்கு என நினைக்கின்றேன்.
பெரியவர்களாக இருக்கும் நமக்கே சுளுக்கு பிடித்தால் அதன் வலியை தாங்க முடியாது. பிஞ்சுகள் , அதுவும் எங்கே உறம் இருக்கு என நமக்கு சொல்லத் தெரியாத அந்த பிஞ்சுகளுக்கு உறம் விழுந்தால் எப்படி இருக்கும் ? இப்படியாக கைக்குழந்தையான இருந்த அந்த குட்டியைதான் முதலில் தூக்கினேன். தூக்கியவுடனே "வீர்" என்று அழ ஆரம்பித்துவிட்டாள். என்ன செய்வது என தெரியாமல் அப்படியே கீழே அவளை வைத்துவிட்டேன். முகம் , உடம்பெல்லாம் சிவப்பு வரணத்தில் மாறிவிட்டன. எனக்கோ சரியான பயம். என்னால் ஏதாவது ஆகிவிட்டதா என.
இப்படிதான் எங்களது தொடர்பு ஆரம்பித்தது. என் அத்தைவீட்டில் வளர்ந்தால் அந்த செல்லம். ஆனால் அவர்கள் வேலைக்குச் சொல்லும் பொழுது அவளை பார்த்துக் கொண்டது நாங்கள் தான். பிள்ளைகளை அடித்து வளர்ப்பதை விட அன்பால் வளர்ப்பது தான் முறை என என் பெற்றோர்களின் நம்பிக்கை. எங்களை என் பெற்றோர்கள் திட்டினார்கள் என்றால் அதை விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அடிக்காத பெற்றோர்கள் , அன்பாக பேசுபவர்கள், இம்மாதிரி இருந்தால் எந்த குழந்தைதான் பாசத்தால் எங்களிடம் இணையாது? இந்த குட்டியும் அப்படிதான். அப்பாவுடன் சேர்ந்து ஒரு மணிநேரம் சாமி கும்பிடுவாள். காயத்திரி மந்திரத்தின் மேல் இவளுக்கு அலாதி நம்பிக்கை.
ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ
யோன: ப்ரசோதயாத்
ஒரு முறை அவளது காலில் அடிப்பட்டது என அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்த பொழுது. இந்த மந்திரத்தை சொல்லும்மா சீக்கிரம் குணமாகும் என சொன்னார் என் அம்மா. அவளும் அதை செய்தால். அவள் மனமுடைந்த பொழுது அவளுக்கு உறுதுணையாக இருந்தது இந்த மந்திரம் தான்.
எங்களுள் ஒருவராய் வளர்ந்தவளுக்கு பிறந்தநாள்.
எங்கள் குட்டியின் பதிமூன்றாவது பிறந்தநாள். அவள் பிறந்து பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன என என்னால் நம்ப முடியவில்லை.
அவளை பிறந்த பொழுது தூக்கியது நினைவில் இன்றும் இருக்கிறது. பிங் நிறத்தில் இருந்தாள். கைக் குழந்தைகளை தூக்குவது என்றால் எனக்கு ஒரு பயம். என் கைகளின் இடுக்குகள் வழியாக அந்த சிறு உருவம் கீழே விழுந்துவிடுமோ என்ற பயம். அம்மா அடிக்கடி நினைவுறுத்தும் அறிவுரை, பிள்ளைகளின் தலையை நன்றாக பிடிக்க வேண்டும் இல்லையேல் உறம் விழுந்துவிடும் என. உறம் என்றால் சுளுக்கு என நினைக்கின்றேன்.
பெரியவர்களாக இருக்கும் நமக்கே சுளுக்கு பிடித்தால் அதன் வலியை தாங்க முடியாது. பிஞ்சுகள் , அதுவும் எங்கே உறம் இருக்கு என நமக்கு சொல்லத் தெரியாத அந்த பிஞ்சுகளுக்கு உறம் விழுந்தால் எப்படி இருக்கும் ? இப்படியாக கைக்குழந்தையான இருந்த அந்த குட்டியைதான் முதலில் தூக்கினேன். தூக்கியவுடனே "வீர்" என்று அழ ஆரம்பித்துவிட்டாள். என்ன செய்வது என தெரியாமல் அப்படியே கீழே அவளை வைத்துவிட்டேன். முகம் , உடம்பெல்லாம் சிவப்பு வரணத்தில் மாறிவிட்டன. எனக்கோ சரியான பயம். என்னால் ஏதாவது ஆகிவிட்டதா என.
இப்படிதான் எங்களது தொடர்பு ஆரம்பித்தது. என் அத்தைவீட்டில் வளர்ந்தால் அந்த செல்லம். ஆனால் அவர்கள் வேலைக்குச் சொல்லும் பொழுது அவளை பார்த்துக் கொண்டது நாங்கள் தான். பிள்ளைகளை அடித்து வளர்ப்பதை விட அன்பால் வளர்ப்பது தான் முறை என என் பெற்றோர்களின் நம்பிக்கை. எங்களை என் பெற்றோர்கள் திட்டினார்கள் என்றால் அதை விரல் விட்டு எண்ணும் அளவிற்குதான் அடிக்காத பெற்றோர்கள் , அன்பாக பேசுபவர்கள், இம்மாதிரி இருந்தால் எந்த குழந்தைதான் பாசத்தால் எங்களிடம் இணையாது? இந்த குட்டியும் அப்படிதான். அப்பாவுடன் சேர்ந்து ஒரு மணிநேரம் சாமி கும்பிடுவாள். காயத்திரி மந்திரத்தின் மேல் இவளுக்கு அலாதி நம்பிக்கை.
ஓம் பூர் புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹிதியோ
யோன: ப்ரசோதயாத்
ஒரு முறை அவளது காலில் அடிப்பட்டது என அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்த பொழுது. இந்த மந்திரத்தை சொல்லும்மா சீக்கிரம் குணமாகும் என சொன்னார் என் அம்மா. அவளும் அதை செய்தால். அவள் மனமுடைந்த பொழுது அவளுக்கு உறுதுணையாக இருந்தது இந்த மந்திரம் தான்.
எங்களுள் ஒருவராய் வளர்ந்தவளுக்கு பிறந்தநாள்.
[தொடரும்]
அன்புடன்
அன்புடன்
சாரம்பதி
Subscribe to:
Posts (Atom)